என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இளங்கோவன் பிறந்தநாள் விழா: மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ,திருமாவளவன், கம்யூ. தலைவர்கள் பங்கேற்பு
சென்னை:
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இன்று 70-வது பிறந்த நாள்.
இந்த விழாவை அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் தொண்டர்கள் முடிவு செய்தனர்.
இதையொட்டி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வேலப்பன் சாவடியில் பிரமாண்டமான விழா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
பிறந்த நாள் விழாவுக்கு தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஏ.பி.சி. வி.சண்முகம் வரவேற்றார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன், புதுச்சேரி சபாநாயகர் வைத்தியலிங்கம், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், புதுவை முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன்.
சஞ்சய்தத், பாப்பிராஜ், எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, எம்.எல்.ஏ.க்கள் வசந்த்குமார், காளிமுத்து உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.
இளங்கோவனுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமான பரீசுகள் வழங்கினார்கள். ஆளுயர மாலை, மலர் கிரீடம், வீரவாள் ஆகியவற்றை பரிசாக வழங்கினார்கள்.
இந்த நிழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏ.ஜி.சிதம்பரம், வி.ஆர்.சிவராமன், பாலமுருகன், ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோகர், நாஞ்சில் பிரசாத், சக்கரபாணி ரெட்டியார், முன்னாள் எம்.எல்.ஏ. முனிரத்தினம், மயிலைதரணி, மயிலை அசோக், எம்.பி.குணா, பி.எஸ்.புத்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற தலைவர்களுக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நாசே. ராஜேஷ் நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
இளங்கோவன் ஏற்புரை நிகழ்த்தினார். திருமகன் ஈ.வெ.தா. நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்