search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்தில் கிளைமேட் சூப்பர்.. வியர்க்கவே இல்லை -ரோகித் சர்மாவின் கூலான பேட்டி
    X

    இங்கிலாந்தில் கிளைமேட் சூப்பர்.. வியர்க்கவே இல்லை -ரோகித் சர்மாவின் கூலான பேட்டி

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் அபாரமாக சதம் அடித்து ஆட்ட நாயகனாக தேர்வான ரோகித் சர்மா, செய்தியாளர்களுக்கு கூலாக பேட்டி அளித்துள்ளார்.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. 

    இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா சதம் விளாசினார்.

    இந்திய அணியில் 122 ரன்களுடன் அபாரமாக விளையாடி ஆட்ட நாயகனாக ரோசித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரோகித் சர்மா கூறியதாவது:

    இந்த போட்டி வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பந்து வீச்சாளர்களுக்கான களமாகவே இந்த களம் அமைந்தது. இதனால் என்னுடைய இயல்பான, வழக்கமான ஆட்டத்தை ஆட முடியவில்லை. நேரம் எடுத்துக் கொண்டு மெதுவாகதான் விளையாடினேன்.

    நான் விளையாட விரும்பிய சில ஷாட்களை தவிர்த்தேன். சரியான பந்துகளை மட்டுமே எதிர்கொண்டேன்.  குறைவான ஸ்கோர்தான் என்றாலும் ஆரம்பத்தில் மெதுவாகதான் விளையாடினேன். பின்னர் பார்ட்னர்ஷிப்பை வலுப்படுத்த முடிவெடுத்தேன்.



    அணியில் வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினர்.  ஒன்றிரண்டு வீரர்களை மட்டுமே சார்ந்து ஓர் அணி செயல்பட முடியாது.

    இந்திய அணி கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக இருந்தது. இந்திய அணிக்கு அதுவே பலமாகவும் அமைந்தது. அணியில் இருக்கும் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது.

    சில நேரங்களில் மட்டும் அணியில் ஒருவர் சிறப்பாக ஆடி விடுகிறார். இது ஒரு பெரிய போட்டி. நாங்கள் அனைவருமே சிறப்பாக ஆடியிருக்கிறோம்.

    இந்தியாவை போல் அல்லாமல், இங்கிலாந்தில் கிளைமேட் சூப்பர். விளையாடும்போது அதிகமாக வியர்க்கவில்லை. மைதானமும் விளையாட சிறப்பாக அமைந்தது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×