என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்தில் கிளைமேட் சூப்பர்.. வியர்க்கவே இல்லை -ரோகித் சர்மாவின் கூலான பேட்டி
Byமாலை மலர்6 Jun 2019 4:01 AM GMT (Updated: 6 Jun 2019 4:01 AM GMT)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் அபாரமாக சதம் அடித்து ஆட்ட நாயகனாக தேர்வான ரோகித் சர்மா, செய்தியாளர்களுக்கு கூலாக பேட்டி அளித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா சதம் விளாசினார்.
இந்திய அணியில் 122 ரன்களுடன் அபாரமாக விளையாடி ஆட்ட நாயகனாக ரோசித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரோகித் சர்மா கூறியதாவது:
இந்த போட்டி வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பந்து வீச்சாளர்களுக்கான களமாகவே இந்த களம் அமைந்தது. இதனால் என்னுடைய இயல்பான, வழக்கமான ஆட்டத்தை ஆட முடியவில்லை. நேரம் எடுத்துக் கொண்டு மெதுவாகதான் விளையாடினேன்.
நான் விளையாட விரும்பிய சில ஷாட்களை தவிர்த்தேன். சரியான பந்துகளை மட்டுமே எதிர்கொண்டேன். குறைவான ஸ்கோர்தான் என்றாலும் ஆரம்பத்தில் மெதுவாகதான் விளையாடினேன். பின்னர் பார்ட்னர்ஷிப்பை வலுப்படுத்த முடிவெடுத்தேன்.
அணியில் வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினர். ஒன்றிரண்டு வீரர்களை மட்டுமே சார்ந்து ஓர் அணி செயல்பட முடியாது.
இந்திய அணி கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக இருந்தது. இந்திய அணிக்கு அதுவே பலமாகவும் அமைந்தது. அணியில் இருக்கும் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது.
சில நேரங்களில் மட்டும் அணியில் ஒருவர் சிறப்பாக ஆடி விடுகிறார். இது ஒரு பெரிய போட்டி. நாங்கள் அனைவருமே சிறப்பாக ஆடியிருக்கிறோம்.
இந்தியாவை போல் அல்லாமல், இங்கிலாந்தில் கிளைமேட் சூப்பர். விளையாடும்போது அதிகமாக வியர்க்கவில்லை. மைதானமும் விளையாட சிறப்பாக அமைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X