என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் டேல் ஸ்டெயின் விளையாடமாட்டார்
Byமாலை மலர்28 May 2019 3:26 PM GMT (Updated: 28 May 2019 3:26 PM GMT)
காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடையாததால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஸ்டெயின் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
தென்ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் இடம் பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடும்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகவில்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் கூறுகையில் ‘‘ஸ்டெயின் இன்னும் சிறந்த வகையில் குணமடையவில்லை. குணமடைவதற்கு இன்னும் வெகுதூரம் இல்லை. இருந்தாலும் தயாராகவில்லை.
உலகக்கோப்பை தொடர் ஆறுவாரக் காலம் நடைபெறுகிறது. இந்த விஷயம் குறித்து உடனடியாக முடிவு எடுக்க தேவையில்லை. அவர் முதல் ஆட்டத்தில் இடம்பிடிக்க மாட்டார். நாங்கள் அவரைத்தவிர 14 வீரர்கள் பெற்றுள்ளோம். அதில் இருந்து நான்கு பேரை தேர்வு செய்வோம்’’ என்றார்.
தென்ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் இடம் பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடும்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகவில்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் கூறுகையில் ‘‘ஸ்டெயின் இன்னும் சிறந்த வகையில் குணமடையவில்லை. குணமடைவதற்கு இன்னும் வெகுதூரம் இல்லை. இருந்தாலும் தயாராகவில்லை.
உலகக்கோப்பை தொடர் ஆறுவாரக் காலம் நடைபெறுகிறது. இந்த விஷயம் குறித்து உடனடியாக முடிவு எடுக்க தேவையில்லை. அவர் முதல் ஆட்டத்தில் இடம்பிடிக்க மாட்டார். நாங்கள் அவரைத்தவிர 14 வீரர்கள் பெற்றுள்ளோம். அதில் இருந்து நான்கு பேரை தேர்வு செய்வோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X