search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான்கு மணி நேரம் போராடியும் பலனில்லை: தரநிலை பெறாத வீரரிடம் வீழ்ந்தார் மெட்வெதேவ்
    X

    நான்கு மணி நேரம் போராடியும் பலனில்லை: தரநிலை பெறாத வீரரிடம் வீழ்ந்தார் மெட்வெதேவ்

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நான்கு மணி நேரம் போராடியும், 12-ம் நிலை வீரரான மெட்வெதேவால் வெற்றிபெற முடியவில்லை.
    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸில் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் சுற்று ஒன்றில் 12-ம் தரநிலையில் உள்ள ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெட்வெதேவ் பிரான்ஸைச் சேர்ந்த ஹெர்பெர்ட்-ஐ எதிர்கொண்டார்.

    தொடக்கத்தில் தரநிலை பெறாத ஹெர்பெர்ட்டால் 12-ம் நிலை வீரரான மெட்வெதேவின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் மெட்வெதேவ் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    அதன்பின் ஹெர்பெர்ட் வீறுகொண்டு எழுந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 3-வது செட்டை 6-3, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் 2-2 என இருவரும் சமநிலையில் இருந்தனர். வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்து விளையாடினர். இறுதியில் ஹெர்பெர்ட் 7-5 என வெற்றி பெற்று மெட்வெதேவ்-ஐ முதல் சுற்றோடு வெளியேற்றினார்.

    ஐந்து செட்டுகளில் மூன்று மணி நேரம் 54 நிமிடங்கள் போராடி ஏமாற்றம் அடைந்தார் மெட்வெதேவ்.
    Next Story
    ×