search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு
    X

    உலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள்: ஸ்டீவ் வாக் கணிப்பு

    உலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் கணித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்து  ஆடுகளங்கள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சுமார் 55 போட்டிகளில் 45-க்கும் மேற்பட்டதில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அணிகளும் தலா 9 ஆட்டங்களில் விளையாடும் என்பதால் முன்னணி பேட்ஸ்மேன்கள் சர்வ சாதாரணமாக 500 ரன்களை தாண்டுவார்கள்.



    இந்நிலையில் ரன் குவிப்பில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ஆகியோர் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×