search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு இணையான வேறு எந்த வீரரும் இல்லை: சேவாக்
    X

    இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு இணையான வேறு எந்த வீரரும் இல்லை: சேவாக்

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தி வரும் ஹர்திக் பாண்டியாவுக்கு இணையாக இந்திய அணயில் வேறு எந்த வீரரும் இல்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்கிறார். ‘காபி வித் கரண்’ டிவி நிகழ்ச்சிக்குப்பின் அமைதியான வீரராக மாறிவிட்டார்.

    நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 91 ரன்கள் குவித்து அசத்தினார். 15 இன்னிங்சில் 402 ரன்கள் குவித்துள்ளார். 10-க்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார். இவரது பேட்டிங் ஸ்டிரைக் 191.42 ஆகும்.

    இந்நிலையில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு இணையான வீரர் யாரும் இல்லை என்று முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் தெரிவித்துள்ளார்.



    ஹர்திக் பாண்டியா குறித்து சேவாக் கூறுகையில் ‘‘பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவின் திறமைக்கு இணையாக இந்திய அணியில் யாரும் இல்லை.

    அவருக்கு இணையாக யாராவது ஒருவர் இருந்திருந்தால், மூன்று துறைகளிலும் (பந்து வீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங்- three-dimensional) ஜொலிக்கும் வீரரரை பிசிசிஐ தேர்வு செய்திருக்கும். அப்படி இருந்திருந்தால் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்பியிருக்க முடியாது’’ என்றார்.
    Next Story
    ×