search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது முறையாக பிரிமீயர் லீக்கை தட்டிச் சென்றது மான்செஸ்டர் சிட்டி
    X

    2-வது முறையாக பிரிமீயர் லீக்கை தட்டிச் சென்றது மான்செஸ்டர் சிட்டி

    ஒரு புள்ளி வித்தியாசத்தில் லிவர்பூலை பின்னுக்குத் தள்ளி 2-வது முறையாக பிரிமீயர் லீக்கை கோப்பையை தட்டிச் சென்றது மான்செஸ்டர் சிட்டி.
    உலகளவில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர்களில் ஒன்று இங்கிலீஷ் பிரிமீயர் லீக். 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்த வருடம் மே மாதம் வரை நடைபெறும். இதில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.

    கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற மான்செஸ்டர் சிட்டி அணிக்கும், யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லிவர்பூல் அணிக்கும் இடையே புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல கடும் போட்டி நிலவியது.



    37 போட்டிகள் முடிவில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது புரியாத புதிராக இருந்தது. மான்செஸ்டர் சிட்டி 95 புள்ளிகளும், லிவர்பூல் 94 புள்ளிகளும் பெற்றிருந்தது. மான்செஸ்டர் தோல்வி அல்லது டிரா செய்து, லிவர்பூல் வெற்றி பெற்றால், லிவர்பூல் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு இருந்தது.

    இந்நிலையில் இன்று இரு அணிகளும் கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றால் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்ற நிலையில், பிரைட்டன் அணியை எதிர்கொண்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி 4-1 என எளிதில் வெற்றி பெற்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 98 புள்ளிகள் பெற்றது. அதேவேளையில் லிவர்பூல் வோல்வர்ஹாம்ப்டன் அணியை 2-0 என வீழ்த்தியது. இதனால் லிவர்பூல் 97 புள்ளிகள் பெற்றது.



    ஒரு புள்ளி வித்தியாசத்தில் மான்செஸ்டர் சிட்டி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது. இங்கிலீஷ் பிரிமீயர் தொடரை அடுத்தடுத்து கடைசி 10 வருடத்தில் வென்ற ஒரே அணி மான்செஸ்டர் சிட்டியாகும்.
    Next Story
    ×