search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 பந்தில் பட்லர் சதம்: 373 ரன்கள் குவித்தும் பாகிஸ்தானை 12 ரன்னிலேயே வீழ்த்தியது இங்கிலாந்து
    X

    50 பந்தில் பட்லர் சதம்: 373 ரன்கள் குவித்தும் பாகிஸ்தானை 12 ரன்னிலேயே வீழ்த்தியது இங்கிலாந்து

    பாகிஸ்தானுக்கு எதிராக 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் 50 பந்தில் சதம் விளாச, இங்கிலாந்து 373 ரன்கள் குவித்தது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நேற்று சவுத்தாம்ப்டனில் நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 373 ரன் குவித்தது.

    பட்லர் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 50 பந்தில் 4 பவுண்டரி, 9 சிக்சருடன் 100 ரன்னை தொட்டார். பட்லர் 55 பந்தில் 110 ரன்னும் (6 பவுண்டரி, 9 சிக்சர்), ஜேசன் ராய் 87 ரன்னும், கேப்டன் மோர்கன் 48 பந்தில் 71 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 361 ரன் குவித்தது. இதனால் இங்கிலாந்து அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    பகர் ஜமான் சதம் அடித்தும் பலன் இல்லாமல் போனது. அவர் 106 பந்தில் 138 ரன்னும் (12 பவுண்டரி, 4 சிக்சர்), ஆஷிப் அலி, பாபர் ஆசம் தலா 51 ரன்னும் எடுத்தனர்.

    ப்ளங்கெட், டேவிட் வில்லே தலா 2 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், மொயீன் அலி, அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×