search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை வீரர் கேதர் ஜாதவ் காயம் - எஞ்சிய போட்டியில் ஆடமாட்டார்
    X

    சென்னை வீரர் கேதர் ஜாதவ் காயம் - எஞ்சிய போட்டியில் ஆடமாட்டார்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் காயம் காரணமாக எஞ்சிய போட்டியில் ஆடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. #IPL2019 #KedarJadhav

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பந்தை தடுக்க பாய்ந்து விழுந்த போது (14-வது ஓவர்) இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார். வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக வெளியேறினார். அதன் பிறகு பீல்டிங் செய்ய வரவில்லை. காயத்தன்மை குறித்து அறிய இன்று ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.



    அவரை பார்க்கும் போது, எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் (அதாவது பிளே-ஆப் சுற்றில்) விளையாட வாய்ப்பில்லை என்றே தோன்றுவதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நேற்றிரவு தெரிவித்தார். உலக கோப்பை போட்டி நெருங்குவதால் 34 வயதான கேதர் ஜாதவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது. #IPL2019 #KedarJadhav
    Next Story
    ×