search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து ரபாடா விலகல்
    X

    ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து ரபாடா விலகல்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா முதுகு வலி காரணமாக எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #IPL2019 #DC #Rabada
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இவரது அபாரமான பந்து வீச்சால் டெல்லி கேப்பிட்டல்ஸ் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது. 12 ஆட்டத்தில் 25 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ‘பர்பிள்’ தொப்பியை தன் கைவசம் வைத்திருந்தார். ஒரு ஓவருக்கு சராசரியாக 7.82 ரன்களே விட்டுக் கொடுத்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு கொடுத்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் முதுகு பகுதியில் வலி இருப்பதாக ரபாடா கூறியதால், ஓய்வு கொடுக்கப்பட்டதாக தகவல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்தது.



    இந்நிலையில் முதுகு வலி காரணமாக அவர் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரபாடா இல்லாதது டெல்லி அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
    Next Story
    ×