search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபாடாவுக்கு காயம்: தென்ஆப்பிரிக்கா முடிவுக்காக காத்திருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ்
    X

    ரபாடாவுக்கு காயம்: தென்ஆப்பிரிக்கா முடிவுக்காக காத்திருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ்

    ரபாடாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், டெல்லி அணி தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்காக காத்திருக்கிறது. #IPL2019 #DC #Rabada
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவரது அபாரமான பந்து வீச்சில் டெல்லி கேப்பிட்டல்ஸ் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 12 ஆட்டத்தில் 25 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். ஒரு ஓவருக்கு சராசரியாக 7.82 ரன்களே விட்டுக்கொடுத்துள்ளார்.

    நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு கொடுத்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

    ஆனால் முதுகு பகுதியில் வலி இருப்பதாக ரபாடா கூறியதால், ஓய்வு கொடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இன்று காலை அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் எடுக்கப்பட்டதாகவும், அந்த பரிசோதனைகள் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கிய நிர்வாகி கூறியதாக தகவல் தெரிவிக்கின்றன.



    இதனால் கடைசி மற்றும் பிளே-ஆப்ஸ் சுற்றில் ரபாடா பங்கேற்பாரா? என்பது தென்ஆப்பிரிக்கா கையில்தான் உள்ளது. உலகக்கோப்பைக்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில் ரபாடா காயம் தென்ஆப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×