search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழியர்கள் மற்றும் ரசிகர்களிடம் அன்பை பகிர்ந்து கொண்ட டோனி
    X

    ஊழியர்கள் மற்றும் ரசிகர்களிடம் அன்பை பகிர்ந்து கொண்ட டோனி

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சேப்பாக் மைதானத்தில் சென்னை அணியின் கேப்டன் டோனி மைதானத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் ரசிகர்களிடம் தனது அன்பை பகிர்ந்து கொண்டார். #MSDhoni #CSK #IPL2019 #CSKvsDC
    சென்னை:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், 50-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.   இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.  முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கைய டெல்லி அணி, சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சில் திணறி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.  



    டெல்லி அணி 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் சென்னை அணியின் கேப்டன் டோனி மைதானத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் ரசிகர்களிடம் தனது அன்பை பகிர்ந்து கொண்டார்.  மேலும் ரசிகர்களுக்கு மத்தியில் தோன்றிய டோனி மைதானத்தில் இருந்து கொண்டு ரசிகர்களை நோக்கி அவர்களுக்கு பந்தை அன்பாக அளித்த நிகழ்ச்சி மைதானத்தில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அரங்கமே எழுந்து நின்று, கைதட்டலுடன் ஆரவாரம் செய்தது.



    மேலும் சென்னை அணியின் வீரர்கள் ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், ராயுடு, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் உள்ளிட்ட வீரர்கள் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு டி-சர்ட், சென்னை அணியின் தொப்பி மற்றும் பந்துகளை ரசிகர்களுக்கு பரிசாக அளித்தனர்.  இந்த நிகழ்ச்சி தற்போது வைரலாகி வருகிறது.  



    இதற்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியின்போது தேசிய கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனிக்கு பாராட்டு குவிந்தது நினைவிருக்கலாம்.



    #MSDhoni #CSK #IPL2019 #CSKvsDC
    Next Story
    ×