search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சும்மா கலந்து கொள்ள மட்டுமே செல்லவில்லை, கோப்பையை வெல்லவே செல்கிறோம்: வங்காளதேச வீரர்
    X

    சும்மா கலந்து கொள்ள மட்டுமே செல்லவில்லை, கோப்பையை வெல்லவே செல்கிறோம்: வங்காளதேச வீரர்

    நாங்கள் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் கலந்து கொள்வதற்காக மட்டுமே செல்லமாட்டோம், கோப்பையை வெல்லவே செல்கிறோம் என முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இதில் வங்காளதேச அணியும் ஒன்றும். கடந்த 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் காலிறுதி வரை முன்னேறியது.



    அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹிம். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இவர், ‘‘நாங்கள் இங்கிலாந்து செல்வது, சும்மா உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கு மட்டுமல்ல. கோப்பையை வெல்வதற்காகவும்தான். இதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்’’ என்றார்.
    Next Story
    ×