search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட் பிளே-ஆப் சுற்று ஆட்ட நேரம் மாற்றம்
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட் பிளே-ஆப் சுற்று ஆட்ட நேரம் மாற்றம்

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்றுப் போட்டிகள் துவங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #IPL2019
    புதுடெல்லி:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்கள் மாலை 4 மணி, இரவு 8 மணி என்று இரண்டு நேரங்களில் தொடங்கி நடக்கிறது. லீக் சுற்று முடிந்ததும் 3 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி நடக்கிறது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களில் முதலாவது தகுதி சுற்று சென்னையில் மே 7-ம் தேதியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் மே 8-ம் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் மே 10-ம் தேதியும், இறுதிப்போட்டி ஐதராபாத்தில் மே 12-ம் தேதியும் நடக்கிறது. 

    தவிர்க்க முடியாத சூழ்நிலையை தவிர ஒரு ஆட்டம் அதிகபட்சமாக 3 மணி 20 நிமிடங்களில் நிறைவடைய வேண்டும் என்பது ஐ.பி.எல். விதிமுறையாகும். ஆனால் இந்த சீசனில் பல ஆட்டங்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து இருக்கிறது.

    முதலில் இந்த ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆட்டங்கள் அனைத்தும் அரை மணி நேரம் முன்னதாக இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதே போல் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடக்கும் பெண்கள் ஐ.பி.எல். ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிகிறது. #IPL2019
    Next Story
    ×