என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப் அணி ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை - அஸ்வின்
Byமாலை மலர்9 April 2019 7:55 AM GMT (Updated: 9 April 2019 7:55 AM GMT)
ஐதராபாத் அணியுடனான பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்றது மிகுந்த ஆறுதலை அளிப்பதாகவும் ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை எனவும் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் தெரிவித்துள்ளார். #Ashwin #KXIPvSRH
மொகாலி:
ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி 4-வது வெற்றியை பெற்றது.
மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்தது. வார்னர் அதிகபட்சமாக 62 பந்தில் 70 ரன் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.
பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 53 பந்தில் 71 ரன் எடுத்து (7 பவுண்டரி, 1 சிக்சர்) வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு மயங் அகர்வால் 43 பந்தில் 55 ரன் எடுத்தும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) உதவியாக இருந்தார்.
பஞ்சாப் அணி 4-வது வெற்றியை பெற்றது. உள்ளூர் மைதானமான மொகாலியில் அந்த அணியின் அதிரடி நீடிக்கிறது. இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-
பரபரப்பான ஆட்டத்தில் பெற்ற இந்த வெற்றி மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. இதன் மூலம் எங்களது நம்பிக்கை அதிகரித்து உள்ளது. ஆனாலும் ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை.
கடைசி 10 ஓவர்களில் 100 ரன்களை கொடுத்தது உண்மையிலேயே கடுமையானது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐதராபாத் அணி 3-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணியின் தற்காலிக கேப்டன் புவனேஷ்வர்குமார் கூறும்போது, “எங்களது பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனாலும் பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை. நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆனாலும் நாங்கள் நம்பிக்கையுடன் கடைசி வரை போராடினோம்” என்றார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற லோகேஷ் ராகுல் கூறும்போது , “எனது பேட்டிங் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கையில் காயத்துடன் அகர்வால் விளையாடுவது பாராட்டுதலுக்கு உரியது” என்றார்.
பஞ்சாப் அணி 7-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் நாளை மோதுகிறது, ஐதராபாத் அடுத்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை 14-ந்தேதி எதிர் கொள்கிறது. #Ashwin #KXIPvSRH
ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி 4-வது வெற்றியை பெற்றது.
மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்தது. வார்னர் அதிகபட்சமாக 62 பந்தில் 70 ரன் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.
பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 53 பந்தில் 71 ரன் எடுத்து (7 பவுண்டரி, 1 சிக்சர்) வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு மயங் அகர்வால் 43 பந்தில் 55 ரன் எடுத்தும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) உதவியாக இருந்தார்.
பஞ்சாப் அணி 4-வது வெற்றியை பெற்றது. உள்ளூர் மைதானமான மொகாலியில் அந்த அணியின் அதிரடி நீடிக்கிறது. இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-
பரபரப்பான ஆட்டத்தில் பெற்ற இந்த வெற்றி மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. இதன் மூலம் எங்களது நம்பிக்கை அதிகரித்து உள்ளது. ஆனாலும் ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை.
கடைசி 10 ஓவர்களில் 100 ரன்களை கொடுத்தது உண்மையிலேயே கடுமையானது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐதராபாத் அணி 3-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணியின் தற்காலிக கேப்டன் புவனேஷ்வர்குமார் கூறும்போது, “எங்களது பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனாலும் பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை. நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆனாலும் நாங்கள் நம்பிக்கையுடன் கடைசி வரை போராடினோம்” என்றார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற லோகேஷ் ராகுல் கூறும்போது , “எனது பேட்டிங் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கையில் காயத்துடன் அகர்வால் விளையாடுவது பாராட்டுதலுக்கு உரியது” என்றார்.
பஞ்சாப் அணி 7-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் நாளை மோதுகிறது, ஐதராபாத் அடுத்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை 14-ந்தேதி எதிர் கொள்கிறது. #Ashwin #KXIPvSRH
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X