search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தாவை அதன் குகையிலேயே வீழ்த்துவோம்: டெல்லி கேப்பிட்டல்ஸ் கிறிஸ் மோரிஸ் நம்பிக்கை
    X

    கொல்கத்தாவை அதன் குகையிலேயே வீழ்த்துவோம்: டெல்லி கேப்பிட்டல்ஸ் கிறிஸ் மோரிஸ் நம்பிக்கை

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் குகையிலேயே வீழ்த்துவோம் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #IPL2019
    ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஐந்து போட்டியில் நான்கில் வெற்றியை ருசித்துள்ளது. டெல்லிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்துள்ளது.

    அந்த அணியின் அந்த்ரே ரஸல் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். நான்கு போட்டிகளில் 22 சிக்சர்கள் விளாசியுள்ளார். அவரை எப்படி கட்டுப்படுத்துவது என்பதைதான் எதிரணிகள் முழு குறிக்கோளாக வைத்துள்ளது.

    கேகேஆர் அதன் சொந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடக்கூடியது. குறிப்பாக சேஸிங்கில் புகுந்து விளையாடும். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் குகையிலேயே வீழ்த்துவோம் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிறிஸ் மோரிஸ் கூறுகையில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தற்போது அற்புதமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. அவர்கள் அணியில் தலைசிறந்த மேட்ச் வின்னர்கள் இடம்பிடித்துள்ளனர். மற்ற வீரர்களும் முக்கிய காரணிகளாக விளங்கி வருகிறார்கள். எங்களுக்கு சில நாட்கள் ஓய்வு உள்ளது. அதன்பின் விளையாட இருக்கிறோம். இதனால் எங்களுடைய உடல் புத்துணர்வுடனும், வலிமையாக இருக்கும்.



    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் வெளியில் இருந்து செல்லும் அணிக்கு மிகவும் கடினமானதாக விளங்கி வருகிறது. ஆனால் எங்கள் அணி ஒரு குழுவாக இணைந்து, போட்டியை எதிர்கொள்ள இருக்கிறோம். வெள்ளிக்கிழமை அவர்களை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    சூப்பர் ஓவரில் கொல்கத்தாவை வீழ்த்திய போட்டியின் முழுவதையும் ஆராய்ந்து, என்ன தவறு செய்தோம் என்பதை பார்ப்போம். நாங்கள் எந்த இடத்தில் முன்னேற்றம் அடைய வேண்டுமோ? அந்த இடத்தில் கவனம் செலுத்தி, போட்டிக்கு தயார் என்பதை உறுதி செய்து கொள்வோம்’’ என்றார்.
    Next Story
    ×