search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி வீரர்கள் 15-ந்தேதி அறிவிப்பு
    X

    உலக கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி வீரர்கள் 15-ந்தேதி அறிவிப்பு

    மே மாதம் நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விவரம் வருகிற 15-ந்தேதி மும்பையில் அறிவிக்கப்படுகிறது. #WorldCup2019 #BCCI
    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வருகிற 15-ந்தேதி மும்பையில் அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு 15 வீரர்களை தேர்வு செய்து அறிவிக்கிறது.

    4-வது வீரர் வரிசை, ஆல்ரவுண்டர்கள், சுழற்பந்து வீரர்கள், 2-வது விக்கெட் கீப்பர் ஆகியவை தேர்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. #WorldCup2019
    Next Story
    ×