என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி: ஆர்சிபி தொடர்ந்து 6-வது முறையாக படுதோல்வி
Byமாலை மலர்7 April 2019 10:20 AM GMT (Updated: 7 April 2019 1:58 PM GMT)
டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தொடர்ந்து 6-வது தோல்வியை சந்தித்துள்ளது.#IPL2019 #RCBvDC
ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முதலில் களம் இறங்கியது. ரபாடா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த ஆர்சிபி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே அடித்தது. விராட் கோலி 41 ரன்னும், மொயீன் அலி 32 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து பிரித்வி ஷா உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருக்கும்போது பிரித்வி ஷா 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த இங்கிராம் 22 ரன்னிலும், ரிஷப் பந்த் 18 ரன்னிலும், கிறிஸ் மோரிஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் அய்யர் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 6 பந்தில் மூன்று விக்கெட்டுக்களை இழந்ததால் ஆட்டத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
என்றாலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 18.4 ஓவரில் 152 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி தான் விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முதலில் களம் இறங்கியது. ரபாடா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த ஆர்சிபி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே அடித்தது. விராட் கோலி 41 ரன்னும், மொயீன் அலி 32 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து பிரித்வி ஷா உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருக்கும்போது பிரித்வி ஷா 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த இங்கிராம் 22 ரன்னிலும், ரிஷப் பந்த் 18 ரன்னிலும், கிறிஸ் மோரிஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் அய்யர் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 6 பந்தில் மூன்று விக்கெட்டுக்களை இழந்ததால் ஆட்டத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
என்றாலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 18.4 ஓவரில் 152 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி தான் விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X