search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தோல்வி- டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்
    X

    வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தோல்வி- டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்

    டாப் ஆர்டரில் வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தோல்வி அடைந்ததாக டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார். #IPL2019 #DCvSRH
    புதுடெல்லி:

    புதுடெல்லியில் நேற்று நடந்த ஐ.பி.எல். 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் தோற்கடித்தது.

    முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 129 ரன்னே எடுத்தது. பின்னர் விளையாடிய ஐதராபாத் 18.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    ஐதராபாத் பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். டெல்லி 3-வது தோல்வியை சந்தித்தது.

    தோல்வி குறித்து டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

    “நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணத்துடன் மீண்டும் வர வேண்டும். முதல் இடைவேளை நேரத்தின் போது இந்த ஆடுகளத்தில் 140 ரன் வரை நல்ல இலக்காக இருந்தது என்று கருதினோம்.

    ஆனால் துரதிருஷ்டவசமாக ரன் குறைவாக எடுத்து விட்டோம். டாப் ஆர்டரில் யாராவது ஒரு வீரர் எனக்கு ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் இது எங்களுக்கு ஒரு நல்ல பாடம். பந்து வீச்சில் நாங்கள் நெருக்கடி கொடுத்தது பாராட்டத்தக்கது” என்றார். #IPL2019 #DCvSRH
    Next Story
    ×