என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விராட் கோலி, டி வில்லியர்ஸை வீழ்த்தியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணம்: ஷ்ரேயாஸ் கோபால்
Byமாலை மலர்3 April 2019 12:27 PM GMT (Updated: 3 April 2019 12:27 PM GMT)
விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுக்களை வீழ்த்தியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணம் என ஷ்ரேயாஸ் கோபால் தெரிவித்தார். #IPL2019 #RRvRCB
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் லெக்-ஸ்பின்னரான ஷ்ரேயாஸ் கோபால் சிறப்பாக பந்து வீசி விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரை சாய்த்தார். மேலும் ஹெட்மையர் விக்கெட் வீழ்த்தி, 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
இந்நிலையில் விராட் கோலி, டி வில்லியர்ஸ் விக்கெட்டுக்களை வீழ்த்தியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணம் என ஷ்ரேயாஸ் கோபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷ்ரேயாஸ் கோபால் கூறுகையில் ‘‘ஒரே போட்டியில் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுக்களை வீழ்த்த வேண்டும் என்பது இளைஞர்களின் கனவாக இருக்கும். இவர்களை வீழ்த்தியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணமாக இருக்கும். அதேபோல் ஐபிஎல் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக இருக்கும்.
ஒவ்வொரு விக்கெட்டும் மிகப்பெரியதுதான். ஆனால் இவர்களை போன்ற மிகப்பெரிய வீரர்களை வீழ்த்துவது இன்னும் சிறந்தது’’ என்றார்.
ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் கோபால் ஆர்சிபி-க்கு எதிராக 3 போட்டிகளில் 12 ஓவர்கள் வீசி 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி, டி வில்லியர்ஸ் விக்கெட்டுக்களை வீழ்த்தியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணம் என ஷ்ரேயாஸ் கோபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷ்ரேயாஸ் கோபால் கூறுகையில் ‘‘ஒரே போட்டியில் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுக்களை வீழ்த்த வேண்டும் என்பது இளைஞர்களின் கனவாக இருக்கும். இவர்களை வீழ்த்தியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணமாக இருக்கும். அதேபோல் ஐபிஎல் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக இருக்கும்.
ஒவ்வொரு விக்கெட்டும் மிகப்பெரியதுதான். ஆனால் இவர்களை போன்ற மிகப்பெரிய வீரர்களை வீழ்த்துவது இன்னும் சிறந்தது’’ என்றார்.
ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் கோபால் ஆர்சிபி-க்கு எதிராக 3 போட்டிகளில் 12 ஓவர்கள் வீசி 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X