என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘MI vs CSK’ ஆட்டம் ‘எல் கிளாசிகோ’ போன்று மிகப்பெரிய போட்டி- ரோகித் சர்மா
Byமாலை மலர்3 April 2019 10:20 AM GMT (Updated: 3 April 2019 10:20 AM GMT)
கால்பந்தில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் மோதுவது போன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டம் மிகப்பெரியது என்ற ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #IPL2019
ஐபிஎல் 2019 சீசன் திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளும் தலா மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் நேருக்குநேர் மோதுவதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கால்பந்து கிரிக்கெட்டில் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகள் மோதும் ஆட்டம் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும். அந்த ஆட்டத்தை ‘எல் கிளாசிகோ’ என்று அழைப்பர்.
அதேபோன்றுதான் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஆட்டம் மிகப்பெரியது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடர் எப்போதுமே ஒரு திருவிழாதான். ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களிடம் இதுகுறித்து நான் பேசியபோது, உலகின் மிகப்பெரிய தொடர் என்பதைத்தான் நான் கேட்டுள்ளேன். இந்திய ரசிகர்கள் மூர்க்கத்தானமாக நேசிக்கிறார்கள்.
இன்னும் ஐந்து அல்லது 10 ஆண்டுகளில் லிவர்பூல் vs மான்செஸ்டர் யுனைடெட், ‘எல் கிளாசிகோ’ ஆட்டம் போன்று மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி பார்க்கப்படும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்று. இது அவர்களுடைய 10-வது வருடம். கடந்த 9 முறையும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அவர்களும் நாங்களும் தலா மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளோம்.
இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டத்தை மிகப்பெரியது என்று நான் சொல்லமாட்டேன். மக்கள் அதை விரும்புகிறார்கள். இரு அணிகளும் மோதும்போது சண்டையிடுவது போன்று தோன்றும். இதனால் ஐபிஎல் சீசனில் அதிக ரசிகர்கள் பார்க்கும் போட்டியாக இது திகழ்கிறது’’ என்றார்.
இரு அணிகளும் தலா மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் நேருக்குநேர் மோதுவதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கால்பந்து கிரிக்கெட்டில் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகள் மோதும் ஆட்டம் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும். அந்த ஆட்டத்தை ‘எல் கிளாசிகோ’ என்று அழைப்பர்.
அதேபோன்றுதான் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஆட்டம் மிகப்பெரியது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடர் எப்போதுமே ஒரு திருவிழாதான். ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களிடம் இதுகுறித்து நான் பேசியபோது, உலகின் மிகப்பெரிய தொடர் என்பதைத்தான் நான் கேட்டுள்ளேன். இந்திய ரசிகர்கள் மூர்க்கத்தானமாக நேசிக்கிறார்கள்.
இன்னும் ஐந்து அல்லது 10 ஆண்டுகளில் லிவர்பூல் vs மான்செஸ்டர் யுனைடெட், ‘எல் கிளாசிகோ’ ஆட்டம் போன்று மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி பார்க்கப்படும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்று. இது அவர்களுடைய 10-வது வருடம். கடந்த 9 முறையும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அவர்களும் நாங்களும் தலா மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளோம்.
இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டத்தை மிகப்பெரியது என்று நான் சொல்லமாட்டேன். மக்கள் அதை விரும்புகிறார்கள். இரு அணிகளும் மோதும்போது சண்டையிடுவது போன்று தோன்றும். இதனால் ஐபிஎல் சீசனில் அதிக ரசிகர்கள் பார்க்கும் போட்டியாக இது திகழ்கிறது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X