search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான்கு போட்டிகளிலும் தொடக்க வீரர்களை மாற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    X

    நான்கு போட்டிகளிலும் தொடக்க வீரர்களை மாற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடக்க வீரர்களை மாற்றியுள்ளது. #IPL2019 #RCB
    ஐபிஎல் 2019-வது சீசன் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளன.

    இன்று இரு அணிகளும் முதல் வெற்றிக்காக விளையாடி வருகின்றன. ஆர்சிபி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 70 ரன்னில் சுருண்டது. இந்த போட்டியில் விராட் கோலி - பார்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 16 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக பார்தீவ் பட்டேல் - மொயீன் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி 27 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 3-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 231 ரன்னை சேஸிங் செய்ய பார்தீவ் பட்டேல் - ஹெட்மையர் ஜோடியை களம் இறக்கியது. இந்த ஜோ 13 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக பார்தீவ் பட்டேல் - விராட் கோலி களம் இறங்கியுள்ளனர்.
    Next Story
    ×