என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
20-ந்தேதி உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்
Byமாலை மலர்1 April 2019 1:57 PM GMT (Updated: 1 April 2019 1:57 PM GMT)
இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் 20-ந்தேதிக்குள் அறிவிக்கப்படும் என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். #WorldCup2019
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் இந்தியா உள்பட 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்திய அணி கடந்த சில மாதங்களாக உலகக்கோப்பைக்கு தயாராகி வருகிறது. வீரர்களை மாற்றி பரிசோதனை நடத்தியது. ஏறக்குறைய வீரர்களை தேர்வு செய்துவிட்டோம். அதிகபட்சம் ஒன்றிரண்டு மாற்றங்கள் வேண்டுமென்றால் இருக்கும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார்.
இந்நிலையில் ஏப்ரல் 20-ந்தேதிக்குள் இந்திய அணியில் இடம்பிடிக்கும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘நாங்கள் உலகக்கோப்பைக்கான அணியை வருகிற 20-ந்தேதிக்குள் அறிவிக்க இருக்கிறோம். நாங்கள் சிறந்த அணியை அறிவிப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதற்காக கடுமயாக உழைத்துள்ளோம். அனைத்து வீரர்களை பற்றி புரிந்து வைத்துள்ளோம். சிறந்த காம்பினேசன் குறித்து பரிசோதனை செய்துள்ளோம். நாங்கள் அறிவிக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
இந்திய அணி கடந்த சில மாதங்களாக உலகக்கோப்பைக்கு தயாராகி வருகிறது. வீரர்களை மாற்றி பரிசோதனை நடத்தியது. ஏறக்குறைய வீரர்களை தேர்வு செய்துவிட்டோம். அதிகபட்சம் ஒன்றிரண்டு மாற்றங்கள் வேண்டுமென்றால் இருக்கும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார்.
இந்நிலையில் ஏப்ரல் 20-ந்தேதிக்குள் இந்திய அணியில் இடம்பிடிக்கும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘நாங்கள் உலகக்கோப்பைக்கான அணியை வருகிற 20-ந்தேதிக்குள் அறிவிக்க இருக்கிறோம். நாங்கள் சிறந்த அணியை அறிவிப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதற்காக கடுமயாக உழைத்துள்ளோம். அனைத்து வீரர்களை பற்றி புரிந்து வைத்துள்ளோம். சிறந்த காம்பினேசன் குறித்து பரிசோதனை செய்துள்ளோம். நாங்கள் அறிவிக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X