search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘யார்க்கர்’ மட்டுமே குறிக்கோளாக இருந்தது: ‘சூப்பர் ஓவர்’ ஹீரோ ரபாடா சொல்கிறார்
    X

    ‘யார்க்கர்’ மட்டுமே குறிக்கோளாக இருந்தது: ‘சூப்பர் ஓவர்’ ஹீரோ ரபாடா சொல்கிறார்

    சூப்பர் ஓவரில் யார்க்கர் மட்டுமே வீச வேண்டும் என்ற குறிக்கோளுடன் களம் இறங்கினேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார். #DCvKKR
    டெல்லியில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

    முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ரன்கள் அடித்தது. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. டெல்லி அணியின் ரபாடாவின் துள்ளிய யார்க்கரால் கேகேஆர் அணியால் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்றது.



    சூப்பர் ஓவரில் சிறப்பாக பந்து வீசிய ரபாடா, அந்த ஓவர் குறித்து கூறுகையில் ‘‘உண்மையிலேயே கடைசி ஓவரின்போது பதற்றம் அதிக அளவில் இருந்தது. இதுபோன்ற நேரத்தில் எப்படி பந்துவீச வேண்டும் என்பதை உங்களது மனதில் தெளிவாக பதிவு செய்துவிட வேண்டும்.



    யார்க்கர் பந்துகள் வீச வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினேன். அது சரியாக வேலை செய்தது. நான் என்னுடைய திட்டத்தில் தெளிவாக இருந்தேன்’’ என்றார்.

    ரபாடா வீசிய துல்லியமான 3-வது யார்க்கர் பந்தில் ரஸல் க்ளீன் போல்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×