search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்து வீச்சில் தாமதம்: ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்
    X

    பந்து வீச்சில் தாமதம்: ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாததால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #IPL2019
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 9-வது லீக் ஆட்டம் மொகாலியில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்தது. பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.



    இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் கேப்டனான ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×