என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் ஓவரில் 7 பந்துகள் வீசிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின்
Byமாலை மலர்30 March 2019 11:51 AM GMT (Updated: 30 March 2019 11:51 AM GMT)
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் நடுவர் கவனிக்காததால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதல் ஓவரில் 7 பந்துகள் வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. #KXIvMI
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பீல்டிங் செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
முதல் ஓவரை அஸ்வின் வீசினார். முதல் 6 பந்தில் அஸ்வின் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். அத்துடன் முதல் ஓவர் முடிந்திருக்க வேண்டும். அஸ்வினும் கவனிக்கவில்லை. நடுவரும் கவனிக்கவில்லை. அஸ்வின் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்பட்டார். இதனால் அஸ்வின் 7-வது பந்தை வீசினார். இதில் டி காக் பவுண்டரி விளாசினார்.
2-வது ஓவர் தொடங்கியபோது வர்ணனையாளர்கள் தெரிவித்தபோதுதான் அஸ்வின் 7 பந்துகள் வீசியது தெரியவந்தது. கடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிராக உள்வட்டத்திற்குள் நான்கு வீரர்களுக்குப் பதிலாக மூன்று வீரர்கள் இருந்ததால் ஷமி பந்தில் ரஸல் க்ளீன் போல்டானது மறுக்கப்பட்டது. அதன்பின் ரஸல் அதிரடியாக ரன் குவித்தது பஞ்சாப் அணிக்கு பெரிய பாதகமாக முடிந்தது என்பது வேதனையாக விஷயம்.
முதல் ஓவரை அஸ்வின் வீசினார். முதல் 6 பந்தில் அஸ்வின் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். அத்துடன் முதல் ஓவர் முடிந்திருக்க வேண்டும். அஸ்வினும் கவனிக்கவில்லை. நடுவரும் கவனிக்கவில்லை. அஸ்வின் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்பட்டார். இதனால் அஸ்வின் 7-வது பந்தை வீசினார். இதில் டி காக் பவுண்டரி விளாசினார்.
2-வது ஓவர் தொடங்கியபோது வர்ணனையாளர்கள் தெரிவித்தபோதுதான் அஸ்வின் 7 பந்துகள் வீசியது தெரியவந்தது. கடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிராக உள்வட்டத்திற்குள் நான்கு வீரர்களுக்குப் பதிலாக மூன்று வீரர்கள் இருந்ததால் ஷமி பந்தில் ரஸல் க்ளீன் போல்டானது மறுக்கப்பட்டது. அதன்பின் ரஸல் அதிரடியாக ரன் குவித்தது பஞ்சாப் அணிக்கு பெரிய பாதகமாக முடிந்தது என்பது வேதனையாக விஷயம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X