search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஓவரில் 7 பந்துகள் வீசிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின்
    X

    முதல் ஓவரில் 7 பந்துகள் வீசிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின்

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் நடுவர் கவனிக்காததால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதல் ஓவரில் 7 பந்துகள் வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. #KXIvMI
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பீல்டிங் செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    முதல் ஓவரை அஸ்வின் வீசினார். முதல் 6 பந்தில் அஸ்வின் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். அத்துடன் முதல் ஓவர் முடிந்திருக்க வேண்டும். அஸ்வினும் கவனிக்கவில்லை. நடுவரும் கவனிக்கவில்லை. அஸ்வின் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்பட்டார். இதனால் அஸ்வின் 7-வது பந்தை வீசினார். இதில் டி காக் பவுண்டரி விளாசினார்.

    2-வது ஓவர் தொடங்கியபோது வர்ணனையாளர்கள் தெரிவித்தபோதுதான் அஸ்வின் 7 பந்துகள் வீசியது தெரியவந்தது. கடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிராக உள்வட்டத்திற்குள் நான்கு வீரர்களுக்குப் பதிலாக மூன்று வீரர்கள் இருந்ததால் ஷமி பந்தில் ரஸல் க்ளீன் போல்டானது மறுக்கப்பட்டது. அதன்பின் ரஸல் அதிரடியாக ரன் குவித்தது பஞ்சாப் அணிக்கு பெரிய பாதகமாக முடிந்தது என்பது வேதனையாக விஷயம்.
    Next Story
    ×