search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவிடம் 4வது தோல்வி - பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் சதம் அடித்தும் பலன் இல்லை
    X

    ஆஸ்திரேலியாவிடம் 4வது தோல்வி - பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் சதம் அடித்தும் பலன் இல்லை

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் சதம் அடித்தும் 6 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது. #PAKvsAUS
    துபாய்:

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துபாயில் பகல்- இரவாக நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன் குவித்தது.

    மேக்ஸ்வெல் 82 பந்தில் 98 ரன்னும் (9 பவுண்டரி, 3 சிக்சர்), உஸ்மான் கவாஜா 62 ரன்னும், அலெக்ஸ் கேரி 55 ரன்னும் எடுத்தனர். இமாத்வாசிம், முகமது ஹஸ்னர், யாஷீர்ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    278 ரன் இலக்குடன் பாகிஸ்தான் ஆடியது.

    16.3 ஓவர்களில் 74 ரன்னில் அந்த அணி 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டான ஆபித் அலி- முகமது ரிஸ்வான் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அபாரமாக ஆடி சதம் அடித்தனர்.

    ஆபித் அலி 112 ரன் எடுத்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டது. 2-வது பந்தில் 104 ரன் எடுத்த முகமது ரிஸ்வான் ஆட்டம் இழந்தார்.

    பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்னே எடுத்தது. இதனால் அந்த அணி 6 ரன்னில் தோற்றது.

    ஆபித் அலி, முகமது ரிஸ்வான் அடித்த சதம் பலன் இல்லாமல் போனது. நாதன் கோல்ட்டர் 3 விக்கெட்டும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ஆஸ்திரேலியா 4-வது போட்டியிலும் வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் நாளை நடக்கிறது. #PAKvsAUS
    Next Story
    ×