search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் வெற்றி ஆர்வத்தில் ஐதராபாத்-ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை
    X

    முதல் வெற்றி ஆர்வத்தில் ஐதராபாத்-ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று ஐதராபாத்தில் நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. #IPL2019 #SRHvRR
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று ஐதராபாத்தில் நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளன.

    ஐதராபாத் அணி கொல்கத்தாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், ராஜஸ்தான், பஞ்சாப்பிடம் 14 ரன் வித்தியாசத்திலும் தோற்றன. முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன.

    வில்லியம்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணியில் வார்னர், மனிஷ்பாண்டே பேர்ஸ்டோவ், புவனேஸ்வர்குமார், விஜய் சங்கர், ரஷித்கான், கவுல், யூசுப் பதான் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது கடைசி கட்டத்தில் ஐதராபாத்தின் பந்து வீச்சு மோசமாக இருந்தது.

    இதனால் பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அந்த அணிக்கு அவசியமாகும். சொந்த மண்ணில் விளையாடுவது ஐதராபாத்துக்கு கூடுதல் உத்வேகம்.

    ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ்பட்சர், ஸ்டீபன் சுமித், பென் ஸ்டோக்ஸ், சாம்சன், ஆர்ச்சர், ஜெய்தேவ் உன்கட் குல்கர்னி போன்ற வீரர்கள் உள்ளனர்.

    அந்த அணி முதல் ஆட்டத்தில் வெற்றியை நோக்கி சென்ற போது ஜோஸ் பட்லர் (69), மன்கட் முறையில் ரன் அவுட் செய்யப்பட்டது. பின்னடைவாக அமைந்தது. அந்த சர்ச்சையில் இருந்து வெளியே வந்து முதல் வெற்றியை ருசிக்க ராஜஸ்தான் போராடும். #IPL2019 #SRHvRR
    Next Story
    ×