search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புஜாரா ஐபிஎல் தொடரில் இருந்திருக்க வேண்டும்: அனில் கும்ப்ளே
    X

    புஜாரா ஐபிஎல் தொடரில் இருந்திருக்க வேண்டும்: அனில் கும்ப்ளே

    டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வரும் புஜாரா ஐபிஎல் தொடரில் இருந்திருக்க வேண்டும் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். #IPL2019
    கிரிக்கெட்டில் மிகப்பெரிய பணக்கார தொடராக ஐபிஎல் விளங்குகிறது. கிரிக்கெட் விளையாடும் முன்னணி நாடுகளில் உள்ள வீரர்கள் இதில் கலந்து கொண்டு கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்கள் கூட பங்கேற்கிறார்கள்.

    ஆனால் இந்திய அணியின் தலைசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரரான புஜாராவை எந்த அணி உரிமையாளர்களும் ஏலத்தில் எடுக்கவில்லை.

    இந்நிலையில் புஜாரா ஐபிஎல் தொடரில் இருந்திருக்க வேண்டும் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘இசாந்த் சர்மா திறமை மற்றும் தன்னம்பிக்கை ஆகிய இரண்டையும் பெற்றுள்ளா். கடந்த சில வருடங்களாக அவர் டெஸ்ட் போட்டியில் மிகவும் அபாரமாக பந்து வீசியுள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாட அவர் தகுதியானவர். ஆனால் சில வீரர்கள் அணியில் இடம்பெறாதது துரதிர்ஷ்டவசமானது.

    இந்திய டெஸ்ட் அணிக்காக மட்டும் விளையாடி வரும் இசாந்த் சர்மா மற்றும் புஜாரா போன்றோர் ஐபிஎல் தொடரில் இருந்திருக்க வேண்டும். இறுதியாக இசாந்த் சர்மா அணியில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்’’ என்றார்.
    Next Story
    ×