search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்: அஸ்வின்
    X

    ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்: அஸ்வின்

    ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும், அங்கேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். #Ashwin
    இந்தியாவின் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக அடுத்த மாதம் 11-ந்தேதி முதல் மே மாதம் 19-ந்தேதி வரை நடக்கிறது. தற்போது தேர்தல் பிரசாரம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே 12-வது ஐபிஎல் சீசன் கடந்த 13-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் மே 5-ந்தேதி வரை நடக்கிறது. ஏறக்குறைய மே மாதம் 15-ந்தேதி வரை ஐபிஎல் திருவிழா நடக்க இருக்கிறது.

    ஐபிஎல் தொடரில் ஏராளமான இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்காக செல்ல வேண்டிய நிலை வரும். இதனால் வீரர்கள் எங்கிருந்தாலும் அங்கேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்தவரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனுமாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எப்போதுமே வாக்களிப்பதை நமது ஜனநாயகத்தின் ஆதாரமாக நினைப்பவன். நாட்டின் உள்ள அனைவரும் கட்டாயமாக வாக்களித்து சரியான தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.

    ஐபில் தொடரில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களும், எந்த இடத்தில் இருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×