search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது ‘லீக்’ ஆட்டம் - பஞ்சாப், ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை
    X

    4-வது ‘லீக்’ ஆட்டம் - பஞ்சாப், ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை

    ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன. #IPL2019 #RajasthanRoyals #KingsXiPunjab
    ஜெய்ப்பூர்:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் கடந்த 23-ந்தேதி தொடங்கியது.

    தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைஸ் ஐதராபாத்தையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 37 ரன்னில் மும்பை இந்தியன்சையும் தோற்கடித்தன.

    4-வது ‘லீக்‘ ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    எந்த அணி வெற்றியுடன் கணக்கை தொடங்க போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடைக்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் விளையாடுகிறார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தால் ராஜஸ்தானை முன்னேற்றம் அடைய செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    கேப்டன் ரகானே, ஆர்ச்சர், பட்லர் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், ஹென்ரிகலை, டேவிட் மில்லர் போன்ற சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

    இரு அணிகளும் 17 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 10 ஆட்டத்திலும், பஞ்சாப் 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. #IPL2019 #RajasthanRoyals #KingsXiPunjab
    Next Story
    ×