என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் தொடரில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்குவேன்: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா
Byமாலை மலர்20 March 2019 12:25 PM GMT (Updated: 20 March 2019 12:25 PM GMT)
ஐபிஎல் தொடரில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்குவேன் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #IPL2019 #RohitSharma
ஐபிஎல் கிரிக்கெட் லீக்கில் மூன்று முறை சாம்பியன் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றவர் ரோகித் சர்மா. இந்திய தேசிய அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடி வரும் இவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும்போது பெரும்பாலும் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்குவதில்லை.
3-வது அல்லது 4-வது வீரராகத்தான் களம் இறங்குவார். ஆனால் இந்த சீசனில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘இந்த வருடம் அனைத்து போட்டிகளிலும் தொடக்க பேட்ஸ்மேனாகத்தான் களம் இறங்குவேன். இது உறுதி.
உலகக்கோப்பை தொடரில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்க இருப்பதால், அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், நான் இந்திய அணிக்காக எந்த இடத்தில் களம் இறங்குகிறனோ, அந்த இடம் எனது மனதில் இருக்கிறது. எங்கள் அணி இதை புரிந்து கொள்ளும்’’ என்றார்.
கடந்த சீசனில் முதல் இரண்டு போட்டிகளில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ரோகித் சர்மா முறையே 15 மற்றும் 11 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் நான்காவது இடத்திற்கு இறங்கினார். அதன்பின் 3, 4 அல்லது ஐந்தாவது இடத்தில் களம் இறங்கினார்.
3-வது அல்லது 4-வது வீரராகத்தான் களம் இறங்குவார். ஆனால் இந்த சீசனில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘இந்த வருடம் அனைத்து போட்டிகளிலும் தொடக்க பேட்ஸ்மேனாகத்தான் களம் இறங்குவேன். இது உறுதி.
உலகக்கோப்பை தொடரில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்க இருப்பதால், அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், நான் இந்திய அணிக்காக எந்த இடத்தில் களம் இறங்குகிறனோ, அந்த இடம் எனது மனதில் இருக்கிறது. எங்கள் அணி இதை புரிந்து கொள்ளும்’’ என்றார்.
கடந்த சீசனில் முதல் இரண்டு போட்டிகளில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ரோகித் சர்மா முறையே 15 மற்றும் 11 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் நான்காவது இடத்திற்கு இறங்கினார். அதன்பின் 3, 4 அல்லது ஐந்தாவது இடத்தில் களம் இறங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X