என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விராட் கோலியின் மனநிலையை பின்பற்ற விரும்புகிறேன்: ஜோஸ் பட்லர்
Byமாலை மலர்20 March 2019 12:04 PM GMT (Updated: 20 March 2019 12:04 PM GMT)
தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதம் விளாசிய ஜோஸ் பட்லர், விராட் கோலியின் மனநிலையை பின்பற்ற விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். #IPL2019 #Buttler
இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் தொடர்ச்சியாக ஐந்து அரைசதம் விளாசி அசத்தினார். ஆனால், இங்கிலாந்து தேசிய அணிக்கு விளையாட வேண்டியிருந்ததால் பாதியிலேயே ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
தற்போது 2019 சீசனுக்காக விளையாட இருக்கிறார். இந்தத் தொடரிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விராட் கோலியின் மனநிலையை பெற விரும்புகிறேன் என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பட்லர் கூறுகையில் ‘‘உயர்ந்த எண்ணம் உண்மையிலேயே எனது மனதில் இல்லை. வழக்கமாக உள்ள மனநிலையோடுதான் உள்ளேன். சில நேரம் ரசிகர்கள் மேலும் அடுத்த லெவலுக்கு செல்லலாம் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். நான் ஏன் அந்த உயர்வாக இடத்தில் அப்படியே இருக்க முடியாது?.
விராட் கோலியைப் போன்று ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிக்க வேண்டும் என்று சில வீரர்கள் நினைக்கலாம். ஆனால், விராட் கோலி அதுபற்றி சிந்திப்பதில்லை. அது சரியானதே. நான் சில புள்ளியில் உயர்ந்த இடத்தில் இருப்பேன். ஒவ்வொரு நாளும் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மனநிலையுடன்தான், களத்தில் இறங்கி பந்தை விளாச இருக்கிறேன்’’ என்றார்.
தற்போது 2019 சீசனுக்காக விளையாட இருக்கிறார். இந்தத் தொடரிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விராட் கோலியின் மனநிலையை பெற விரும்புகிறேன் என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பட்லர் கூறுகையில் ‘‘உயர்ந்த எண்ணம் உண்மையிலேயே எனது மனதில் இல்லை. வழக்கமாக உள்ள மனநிலையோடுதான் உள்ளேன். சில நேரம் ரசிகர்கள் மேலும் அடுத்த லெவலுக்கு செல்லலாம் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். நான் ஏன் அந்த உயர்வாக இடத்தில் அப்படியே இருக்க முடியாது?.
விராட் கோலியைப் போன்று ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிக்க வேண்டும் என்று சில வீரர்கள் நினைக்கலாம். ஆனால், விராட் கோலி அதுபற்றி சிந்திப்பதில்லை. அது சரியானதே. நான் சில புள்ளியில் உயர்ந்த இடத்தில் இருப்பேன். ஒவ்வொரு நாளும் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மனநிலையுடன்தான், களத்தில் இறங்கி பந்தை விளாச இருக்கிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X