என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோனியால் விராட் கோலி கேப்டன் பதவியில் மிகவும் வசதியாக இருக்கிறார்: அனில் கும்ப்ளே
Byமாலை மலர்19 March 2019 10:29 AM GMT (Updated: 19 March 2019 10:29 AM GMT)
கேப்டன் பதவியில் விராட் கோலி மிகவும் வசதியாக இருக்க டோனி உதவி புரிகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். #MSDhoni
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கியவர் எம்எஸ் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, கடந்த 2016-ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக திகழ்ந்து வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி துணைக் கேப்டன் ரோகித் சர்மா, எம்எஸ் டோனி ஆகியோருடன் முக்கியமான கட்டத்தில் ஆலோசனை கேட்பது வழக்கமாக கொண்டுள்ளார்.
கடைசி டெத் ஓவர்களில் பீல்டிங் அமைக்கும் பொறுப்பை டோனியுடன் கொடுத்துவிட்டு, பவுண்டரி லைன் அருகே எந்தவித நெருக்கடியும் இல்லாமல் பீல்டிங் செய்து கொண்டிருப்பார். போட்டியை பார்க்கும்போது இது தெளிவாகத்தெரியும்.
இந்நிலையில் கேப்டன் பதவி வகிக்கும் விராட் கோலியை மிகவும் வசதியான நபராக டோனி உருவாக்குகிறார் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘விராட் கோலி சிறந்த கேப்டன் என்பதை விட, மிகவும் வசதியான கேப்டனாகவே இருக்கிறார் என்று நினைக்கிறேன். டோனி ஸ்டம்பிற்கு பின்னால் நிற்கும்போது விராட் கோலி மிகவும் வசதியாக வளம் வருகிறார். அவருக்கும் டோனிக்கும் இடையிலான பேச்சு, சரியான முடிவை எடுக்க விராட் கோலிக்கு உதவுகிறது.
டோனி நீண்ட காலமாக கேப்டன் பதவியில் இருந்தவர். ஸ்டம்பிற்கு பின்னால் நிற்கும் அவரால், போட்டி எந்த சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை மற்றவர்களை விட திறமையாக அறிந்து கொள்கிறார். பந்து வீச்சாளரிடம் எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும் போன்ற ஆலோசனைகளை வழங்க முடியும். அதேபோல் பீல்டிங்கையுட் செட் செய்ய முடியும்’’ என்றார்.
விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக திகழ்ந்து வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி துணைக் கேப்டன் ரோகித் சர்மா, எம்எஸ் டோனி ஆகியோருடன் முக்கியமான கட்டத்தில் ஆலோசனை கேட்பது வழக்கமாக கொண்டுள்ளார்.
கடைசி டெத் ஓவர்களில் பீல்டிங் அமைக்கும் பொறுப்பை டோனியுடன் கொடுத்துவிட்டு, பவுண்டரி லைன் அருகே எந்தவித நெருக்கடியும் இல்லாமல் பீல்டிங் செய்து கொண்டிருப்பார். போட்டியை பார்க்கும்போது இது தெளிவாகத்தெரியும்.
இந்நிலையில் கேப்டன் பதவி வகிக்கும் விராட் கோலியை மிகவும் வசதியான நபராக டோனி உருவாக்குகிறார் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘விராட் கோலி சிறந்த கேப்டன் என்பதை விட, மிகவும் வசதியான கேப்டனாகவே இருக்கிறார் என்று நினைக்கிறேன். டோனி ஸ்டம்பிற்கு பின்னால் நிற்கும்போது விராட் கோலி மிகவும் வசதியாக வளம் வருகிறார். அவருக்கும் டோனிக்கும் இடையிலான பேச்சு, சரியான முடிவை எடுக்க விராட் கோலிக்கு உதவுகிறது.
டோனி நீண்ட காலமாக கேப்டன் பதவியில் இருந்தவர். ஸ்டம்பிற்கு பின்னால் நிற்கும் அவரால், போட்டி எந்த சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை மற்றவர்களை விட திறமையாக அறிந்து கொள்கிறார். பந்து வீச்சாளரிடம் எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும் போன்ற ஆலோசனைகளை வழங்க முடியும். அதேபோல் பீல்டிங்கையுட் செட் செய்ய முடியும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X