என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் சீசன் 2019: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தொடக்க வீரராக களம் இறங்க விருப்பம்- சகா
Byமாலை மலர்15 March 2019 1:24 PM GMT (Updated: 15 March 2019 1:24 PM GMT)
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி பேட்டிங் செய்ய விரும்புகிறேன் என சகா தெரிவித்துள்ளார். #IPLSeason2019
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டவர் விருத்திமான் சகா. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது காயத்தால் வெளியேறினார். அதன்பின் ஐபிஎல் தொடரில் விளையாடினார். அப்போது கைவிரலில் காயம் ஏற்பட்டது. தோள்பட்டை காயம் மற்றும் கைவிரல் காயத்தால் சுமார் ஒரு வருடம் அவரால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த காலக்கட்டத்தில் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விட்டார். இதனால் சகாவிற்கு மீண்டும் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.
இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்த சகா, சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் களம் இறங்கினார். ஒரு ஆட்டத்தில் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார்.
ஐபிஎல் 2019 சீசன் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. சகா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ளார். ஐதராபாத் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாட ஆசை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘உண்மையிலேயே நான் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி பேட்டிங் செய்வதை விரும்புகிறேன். ஆனால், இந்த முடிவு அணி நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டியது.
பல மாதங்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளேன். இந்த ஐபிஎல் எனக்கு குறிப்பிடத்தகுந்ததாகும்’’ என்றார்.
இந்த காலக்கட்டத்தில் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விட்டார். இதனால் சகாவிற்கு மீண்டும் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.
இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்த சகா, சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் களம் இறங்கினார். ஒரு ஆட்டத்தில் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார்.
ஐபிஎல் 2019 சீசன் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. சகா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ளார். ஐதராபாத் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாட ஆசை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘உண்மையிலேயே நான் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி பேட்டிங் செய்வதை விரும்புகிறேன். ஆனால், இந்த முடிவு அணி நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டியது.
பல மாதங்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளேன். இந்த ஐபிஎல் எனக்கு குறிப்பிடத்தகுந்ததாகும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X