என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனது ஆலோசனை ஏராளமான மக்களுக்கு சிரிப்பை வரவழைக்கலாம்- அப்படி கங்குலி கூறிய கருத்து என்ன?
Byமாலை மலர்15 March 2019 11:40 AM GMT (Updated: 15 March 2019 11:40 AM GMT)
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி நான்காவது இடத்திற்கு இன்னும் சரியான நபரை தேடிக் கொண்டிருக்கும் நிலையில், புஜாராதான் சரியான நபர் என கங்குலி தெரிவித்துள்ளார். #Ganguly
இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்திய அணி கடந்த இரண்டு மூன்று வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு முந்தைய கடைசி தொடரில் ஆஸ்திரேயாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடர 2-3 எனத் இந்தியா தோல்வியடைந்தது. இந்த தோல்விக்குப்பின் இந்திய அணியில் இன்னும் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய சரியான பேட்ஸ்மேன் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்துள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடும் புஜாராவை, நான்காவது இடத்தில் களம் இறக்கலாம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் ஒரு கருத்து கூற இருக்கிறேன். என்னுடைய கருத்து சிலருக்கு நம்ப முடியாத வகையில் இருக்கால், ஏராளமானவர்களுக்கு சிரிப்பைக் கூட தரலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் புஜாரா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4-வது இடத்தில் களமிறக்க வேண்டும்.
புஜாராவின் பீல்டிங் சற்று பலவீனமாக இருக்கலாம். ஆனால் அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்னும் என்னுடைய அபிப்ராயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், இதற்கு முன் இந்திய அணி முயற்சித்துப் பார்த்த இதர பேட்ஸ்மேன்களை விட இவர் சிறந்தவர் என்பது எனது கருத்து’’ என்றார்.
ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு முந்தைய கடைசி தொடரில் ஆஸ்திரேயாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடர 2-3 எனத் இந்தியா தோல்வியடைந்தது. இந்த தோல்விக்குப்பின் இந்திய அணியில் இன்னும் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய சரியான பேட்ஸ்மேன் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்துள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடும் புஜாராவை, நான்காவது இடத்தில் களம் இறக்கலாம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் ஒரு கருத்து கூற இருக்கிறேன். என்னுடைய கருத்து சிலருக்கு நம்ப முடியாத வகையில் இருக்கால், ஏராளமானவர்களுக்கு சிரிப்பைக் கூட தரலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் புஜாரா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4-வது இடத்தில் களமிறக்க வேண்டும்.
புஜாராவின் பீல்டிங் சற்று பலவீனமாக இருக்கலாம். ஆனால் அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்னும் என்னுடைய அபிப்ராயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், இதற்கு முன் இந்திய அணி முயற்சித்துப் பார்த்த இதர பேட்ஸ்மேன்களை விட இவர் சிறந்தவர் என்பது எனது கருத்து’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X