என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யூரோ சாம்பியன்ஸ் லீக்: லியோன் அணியை 5-1 என வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்14 March 2019 12:59 PM GMT (Updated: 14 March 2019 12:59 PM GMT)
யூரோ சாம்பியன்ஸ் லீக் 2-வது லெக்கில் லியோன் அணியை 5-1 என வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியது. #UCL #Barcelona
கிளப் அணிகளுக்கு இடையிலான யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நடைபெற்றன. இதில் ஒவ்வொரு அணிகளும் தலா ஒருமுறை அந்தந்த அணிகளின் சொந்த மைதானத்தில் மோத வேண்டும்.
ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - லியோன் அணிகள் மோதின. லியோன் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2-வது லெக் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்றது.
சொந்த மைதானத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். 31-வது நிமிடத்தில் கவுட்டினோ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேரத்திலும் பார்சிலோனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 58-வது நிமிடத்தில் லியோன் அணியின் லூகாஸ் கோல் அடித்தார். 78-வது நிமிடத்தில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடித்தார். 81-வது நிமிடத்தில் ஜெரார்டு பிக்காய் ஒரு கோலும், 86-வது நிமிடத்தில் டெம்பேல் ஒரு கோலும் அடித்தனர். இதனால் பார்சிலோனா 5-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - லியோன் அணிகள் மோதின. லியோன் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2-வது லெக் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்றது.
சொந்த மைதானத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். 31-வது நிமிடத்தில் கவுட்டினோ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேரத்திலும் பார்சிலோனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 58-வது நிமிடத்தில் லியோன் அணியின் லூகாஸ் கோல் அடித்தார். 78-வது நிமிடத்தில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடித்தார். 81-வது நிமிடத்தில் ஜெரார்டு பிக்காய் ஒரு கோலும், 86-வது நிமிடத்தில் டெம்பேல் ஒரு கோலும் அடித்தனர். இதனால் பார்சிலோனா 5-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X