search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை படைப்பாரா?
    X

    ஒருநாள் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை படைப்பாரா?

    டெல்லி கடைசி ஒருநாள் போட்டியில் ஹிட்மேன் ரோகித் சர்மா 8 ஆயிரம் ரன்கள் கடந்து சாதனைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. #INDvAUS #RohitSharma
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை டெல்லி பெரோஸ் ஷா கோட் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் ஆட்டம் பரபரப்பானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மா இதுவரை ஒருநாள் போட்டியில் 7954 ரன்கள் எடுத்துள்ளார். நாளைய போடடியில் 46 ரன்கள் அடித்தால் 8 ஆயிரம் ரன்கள் அடித்த 8-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

    நாளைய போட்டியின் சில சிறப்பம்சங்கள்:-

    இந்தியா இதுவரை ஆஸ்திரேயாவுக்கு எதிராக 49 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, நாளைய போட்டியில் வெற்றி பெற்றால், 50 வெற்றிகளை பெற்ற 3-வது அணி என்ற பெருமையை பெறும். இதற்கு முன் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 வெற்றிகளை பெற்றுள்ளது.

    இந்தியா வெற்றி பெற்றால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 50 வெற்றிகளை ருசிக்கும். மேலும் 50-க்கு மேல் வெற்றிகளை பெற்ற நான்காவது கேப்டன் என்ற பெருமையை பெறுவார்.

    பேட் கம்மின்ஸ் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் சர்வதேச கிரிக்கெட்டில் 200-வது விக்கெட்டை பதிவு செய்வார். டெஸ்டில் 94 விக்கெட்டுக்களும், ஒருநாள் போட்டியில் 77 விக்கெட்டுக்களும், டி20 போட்டியில் 25 விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார்.

    ஆரோன் பிஞ்ச் இன்னும் 14 ரன்கள் அடித்தால் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 1000 ரன்னைத் தொடுவார்.
    Next Story
    ×