என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவின் பிரபல சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் மரணம்
Byமாலை மலர்12 March 2019 8:18 AM GMT (Updated: 12 March 2019 8:18 AM GMT)
உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் மரணம் அடைந்தார். சைக்கிள் பந்தய சங்கத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #CyclistKellyCatlin
வாஷிங்டன்:
அமெரிக்காவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின்(வயது 23). இவர் 3 முறை (2016, 2017, 2018) உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற அமெரிக்க அணியில் அங்கம் வகித்தவர்.
இந்நிலையில், கெல்லி கேட்லின் கடந்த வியாழக்கிழமை மரணம் அடைந்ததாக அவரது சகோதரர் சமூக வலைத்தளம் மூலம் தகவல் வெளியிட்டார்.
சைக்கிள் பந்தயத்தில் தொடர்ந்து சாதனை படைத்து வந்த கேட்லினுக்கு கடந்த ஆண்டு இறுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்துக்கள் சோதனையாக அமைந்தது. லேசான மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாத இறுதியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். இதனால் அவரது நுரையீரல் மற்றும் இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் சைக்கிள் பந்தயத்தில் இருந்து விலகினார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் வியாழக்கிழமை மரணம் அடைந்துள்ளார். இத்தகவலை அவரது சகோதரர் கொலின் வெளியிட்டுள்ளார்.
கெல்லி கேட்லின் மரணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க சைக்கிள் சங்கம் உறுதி செய்தது. கெல்லி கேட்லின் மறைவுக்கு அமெரிக்க சைக்கிள் பந்தய சங்கத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். #CyclistKellyCatlin
அமெரிக்காவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின்(வயது 23). இவர் 3 முறை (2016, 2017, 2018) உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற அமெரிக்க அணியில் அங்கம் வகித்தவர்.
இந்நிலையில், கெல்லி கேட்லின் கடந்த வியாழக்கிழமை மரணம் அடைந்ததாக அவரது சகோதரர் சமூக வலைத்தளம் மூலம் தகவல் வெளியிட்டார்.
சைக்கிள் பந்தயத்தில் தொடர்ந்து சாதனை படைத்து வந்த கேட்லினுக்கு கடந்த ஆண்டு இறுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்துக்கள் சோதனையாக அமைந்தது. லேசான மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாத இறுதியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். இதனால் அவரது நுரையீரல் மற்றும் இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் சைக்கிள் பந்தயத்தில் இருந்து விலகினார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் வியாழக்கிழமை மரணம் அடைந்துள்ளார். இத்தகவலை அவரது சகோதரர் கொலின் வெளியிட்டுள்ளார்.
கெல்லி கேட்லின் மரணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க சைக்கிள் சங்கம் உறுதி செய்தது. கெல்லி கேட்லின் மறைவுக்கு அமெரிக்க சைக்கிள் பந்தய சங்கத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். #CyclistKellyCatlin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X