search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர்: டோனியை முந்துவாரா ரோகித் சர்மா?
    X

    ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர்: டோனியை முந்துவாரா ரோகித் சர்மா?

    மொகாலில் இன்று நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியில் 2 சிக்சர்கள் அடித்து டோனியின் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    5 ஒருநாள் போட்டித் தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. ராஞ்சி போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் அவர் இடத்தில் ரிசப் பந்த் இடம் பெறுகிறார். இதேபோல தவான், முகமது‌ ஷமிக்கு பதிலாக லோகேஷ் ராகுல், புவனேஸ்வர் குமார் சேர்க்கப்படலாம்.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி தொடரை இழக்காமல் இருக்க இந்தப்போட்டியில் வென்று சமன் செய்யும் ஆர்வத்தில் உள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    ரோகித் சர்மா 216 சிக்சர்கள் அடித்து 2-வது இந்தியராக இருக்கிறார். டோனி இந்தியாவுக்காக 217 சிக்சர்கள் அடித்து உள்ளார். ஆசிய லெவனிலும் சேர்த்து அவர் மொத்தம் 224 சிக்சர்கள் எடுத்துள்ளார்.

    இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 2 சிக்சர் அடித்தால் டோனியை முந்தி முதல் இடத்தை பிடிப்பார். டோனிக்கு 2 ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டதால் அவரை பின்னுக்கு தள்ள ரோகித்துக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    தெண்டுல்கர் 195 சிக்சர்களுடனும், கங்குலி 189 சிக்சர்களுடனும், யுவராஜ் சிங் 153 சிக்சர்களுடனும் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
    Next Story
    ×