search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: சர்பிராஸ் அகமது உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்தது பாகிஸ்தான்
    X

    ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: சர்பிராஸ் அகமது உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்தது பாகிஸ்தான்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சர்பிராஸ் அகமது உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்தது பாகிஸ்தான் #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 24-ந்தேதியும், 3-வது போட்டி 27-ந்தேதியும், 4-வது போட்டி 29-ந்தேதியும், ஐந்தாவது போட்டி மார்ச் 31-ந்தேதியும் நடக்கிறது.

    இதற்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது பெலுக்வாயோ-வை நோக்கி இனவெறி தொடர்பாக பேசிய சர்ச்சையில் நான்கு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்ட கேப்டன் சர்பிராஸ் அகமதுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சோயிப் மாலிக் தொடர்ந்து கேப்டனாக நீடிக்கிறார்.

    மேலும், முன்னணி வீரர்களான பாபர் ஆசம், ஷாஹீன் அப்ரிடி, பகர் சமான், சதாப் கான், ஹசன் அலி ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உமர் அக்மல், ஜுனைத் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    ஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள 16 வீரர்களின் விவரம்:-

    1. சோயிப் மாலிக் (கேப்டன்) 2. அபிட் அலி, 3. பஹீம் அஷ்ரப், 4. ஹரிஸ் சோஹைல் 5. இமாத் வாசிம் 6. இமாம்-உல்-ஹக் 7. ஜுனைத் கான் 8. முகமது அப்பாஸ் 9. முகமது அமிர் 10. முகமது ஹஸ்னைன் 11. முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்) 12. சாத் அலி 13. உமர் அக்மல் 14. உஸ்மான் ஷின்வரி 15. யாசிர் ஷா 16. ஷான் மசூத்.
    Next Story
    ×