என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3-வது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது அயர்லாந்து
Byமாலை மலர்5 March 2019 3:10 PM GMT (Updated: 5 March 2019 3:10 PM GMT)
டேராடூனில் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து. #AFGvIRE
ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று 3-வது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் அஸ்கர் ஆப்கன் 75 ரன்களும், நஜிபுல்லா ஜத்ரன் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் அடிக்க ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 3-வது வீரராக களம் இறங்கிய ஆன்டி பால்பிரைனி ஆட்டமிழக்காமல் 145 ரன்கள் அடிக்க அயர்லாந்து 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4-வது ஆட்டம் 8-ந்தேதி நடக்கிறது.
இந்நிலையில் இன்று 3-வது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் அஸ்கர் ஆப்கன் 75 ரன்களும், நஜிபுல்லா ஜத்ரன் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் அடிக்க ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 3-வது வீரராக களம் இறங்கிய ஆன்டி பால்பிரைனி ஆட்டமிழக்காமல் 145 ரன்கள் அடிக்க அயர்லாந்து 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4-வது ஆட்டம் 8-ந்தேதி நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X