என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலககோப்பையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல்.லில் ஓய்வு அளிக்கப்படுமா? பிசிசிஐ பதில்
Byமாலை மலர்5 March 2019 6:58 AM GMT (Updated: 5 March 2019 6:58 AM GMT)
உலக கோப்பையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல்.லில் ஓய்வு அளிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளித்துள்ளது. #BCCI #IPL2019 #WorldCup2019
புதுடெல்லி:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எஞ்சிய போட்டி அட்டவணை வெளியிடப்படும்.
ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு உலக கோப்பை கிரிக்கெட் நடக்கிறது. இந்தப் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
ஐ.பி.எல். போட்டி முடிந்த 2 வாரத்தில் உலககோப்பை நடக்கிறது. இதனால் பல நாடுகள் தங்கள் வீரர்களை ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் கும்ப்ளே கூறும்போது, “ஐ.பி.எல். போட்டியில் வேகப்பந்து வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு உலககோப்பை போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பு தகுந்த ஓய்வு தேவை” என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் உலக கோப்பையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல்.லில் ஓய்வு அளிப்பது குறித்து தேர்வு குழு முடிவு செய்யும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐயின் தற்போதைய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி கூறியதாவது:-
உலக கோப்பையில் ஆடும் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல். போட்டியில் ஓய்வு அளிப்பது குறித்து தேர்வு குழு முடிவு எடுக்கும். மேலும் இந்த விவகாரத்தில் ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்களின் கருத்தும் கேட்கப்படும். ஏனெனில் இந்த வீரர்களை அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளதால் அவர்களின் கருத்து முக்கியமானது.அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடமும் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #BCCI #IPL2019 #WorldCup2019
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எஞ்சிய போட்டி அட்டவணை வெளியிடப்படும்.
ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு உலக கோப்பை கிரிக்கெட் நடக்கிறது. இந்தப் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
ஐ.பி.எல். போட்டி முடிந்த 2 வாரத்தில் உலககோப்பை நடக்கிறது. இதனால் பல நாடுகள் தங்கள் வீரர்களை ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் கும்ப்ளே கூறும்போது, “ஐ.பி.எல். போட்டியில் வேகப்பந்து வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு உலககோப்பை போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பு தகுந்த ஓய்வு தேவை” என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு டோனி பதில் அளிக்கும் போது, “ஐ.பி.எல்.லில் 4 ஓவர் தான் வீச வேண்டி இருக்கும். இதனால் அது பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சுமையாக இருக்காது. மேலும் ஐ.பி.எல். போட்டியின் அட்டவணையும் சரியான ஓய்வு கால இடைவெளியுடன் தான் உள்ளது. ஆகவே பந்துவீச்சாளர்கள் தகுந்த ஓய்வை எடுத்துக் கொள்ளலாம். 4 ஓவர் வீசும்போது பவுலர்களால் சிறப்பாக பந்துவீச முடியும் என்றார்.
இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறும்போது, “ஐ.பி.எல். போட்டி உலக கோப்பையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அத்துடன் ஐ.பி.எல். போட்டிக்கும், உலககோப்பை இந்திய அணி தேர்வுக்கும் சம்மந்தமில்லை. ஒரு சில வீரர்கள் ஐ.பி.எல்.லில் சிறப்பாக ஆடவில்லையென்றால் அது அவர்கள் உலக கோப்பைக்கான வாய்ப்பில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது” என்றார்.
இது தொடர்பாக பி.சி.சி.ஐயின் தற்போதைய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி கூறியதாவது:-
உலக கோப்பையில் ஆடும் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல். போட்டியில் ஓய்வு அளிப்பது குறித்து தேர்வு குழு முடிவு எடுக்கும். மேலும் இந்த விவகாரத்தில் ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்களின் கருத்தும் கேட்கப்படும். ஏனெனில் இந்த வீரர்களை அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளதால் அவர்களின் கருத்து முக்கியமானது.அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடமும் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #BCCI #IPL2019 #WorldCup2019
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X