என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐஎஸ்எல் கால்பந்தில் கடைசி லீக்கிலும் சென்னையின் எப்.சி. தோல்வி
Byமாலை மலர்1 March 2019 6:14 AM GMT (Updated: 1 March 2019 6:14 AM GMT)
10 அணிகள் இடையிலான 5வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் 87-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 0-1 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவிடம் வீழ்ந்தது.
கோவா:
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 87-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 0-1 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவிடம் வீழ்ந்தது. வெற்றிக்குரிய கோலை கோவா வீரர் பெரான் கோரோமினாஸ் 26-வது நிமிடத்தில் அடித்தார். கோவா அணிக்கு இது 10-வது வெற்றியாகும்.
இத்துடன் சென்னை அணியின் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன. நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது. 18 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 டிரா, 13 தோல்வி என்று 9 புள்ளியுடன் பரிதாபமாக கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது. நடப்பு தொடரில் மொத்தம் 16 கோல்கள் அடித்துள்ள சென்னை அணி 32 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.
இன்றைய லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (இரவு 7.30 மணி) அணிகள் கொச்சியில் சந்திக்கின்றன.
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 87-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 0-1 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவிடம் வீழ்ந்தது. வெற்றிக்குரிய கோலை கோவா வீரர் பெரான் கோரோமினாஸ் 26-வது நிமிடத்தில் அடித்தார். கோவா அணிக்கு இது 10-வது வெற்றியாகும்.
இத்துடன் சென்னை அணியின் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன. நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது. 18 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 டிரா, 13 தோல்வி என்று 9 புள்ளியுடன் பரிதாபமாக கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது. நடப்பு தொடரில் மொத்தம் 16 கோல்கள் அடித்துள்ள சென்னை அணி 32 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.
இன்றைய லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (இரவு 7.30 மணி) அணிகள் கொச்சியில் சந்திக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X