என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விக்கெட் கீப்பர் மூலம் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க ஆசை: ஆஸி. பேட்ஸ்மேன் ஹேண்ட்ஸ்காம்ப்
Byமாலை மலர்26 Feb 2019 10:20 AM GMT (Updated: 26 Feb 2019 10:20 AM GMT)
விக்கெட் கீப்பர் மூலம் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க ஆசை என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஹேண்ட்ஸ்காம்ப் தெரிவித்துள்ளார். #INDvAUS
இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.
ஆனால் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹேண்ட்ஸ்காம்ப் விக்கெட் கீப்பராக களம் இறக்கப்பட்டார். விக்கெட் கீப்பராக பணியாற்றிய ஹேண்ட்ஸ்காம்ப், உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் கீப்பர் பணியை செய்ய தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹேண்ட்ஸ்காம்ப் கூறுகையில் ‘‘பேட்ஸ்மேன் பணியுடன் விக்கெட் கீப்பர் வேலையையும் சேர்த்து என்னால் செய்ய முடியும். ஆனால், அதற்கான உடற்தகுதியை பெற்றுள்ளேனா? என்று பார்க்க வேண்டும்.
இந்தியாவிற்கு எதிரான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பராக களமிறக்கப்பட்டால், கீப்பிங் பணியோடு நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி சிறப்பாக பேட்டிங் செய்து, விக்கெட்டிற்கு எதிராக சிறப்பாக ஓடுவது குறித்து விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. அணிக்காக எல்லாம் சரியாக அமையும்.
டி20 போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்படுவது மிகவும் கடினமானது அல்ல. ஏனென்றால் 20 ஓவர்கள் மட்டுமே விளையாடினால் போதுமானது. ஒருநாள் போட்டி சற்று கடினமானது. குறிப்பாக இந்தியாவில் வெப்பம் அதிகமாக இருக்கும். அத்துடன் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பணிபுரிய வேண்டும். ஆகவே, கடினம்தான். இருந்தாலும் நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
ஆனால் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹேண்ட்ஸ்காம்ப் விக்கெட் கீப்பராக களம் இறக்கப்பட்டார். விக்கெட் கீப்பராக பணியாற்றிய ஹேண்ட்ஸ்காம்ப், உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் கீப்பர் பணியை செய்ய தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹேண்ட்ஸ்காம்ப் கூறுகையில் ‘‘பேட்ஸ்மேன் பணியுடன் விக்கெட் கீப்பர் வேலையையும் சேர்த்து என்னால் செய்ய முடியும். ஆனால், அதற்கான உடற்தகுதியை பெற்றுள்ளேனா? என்று பார்க்க வேண்டும்.
இந்தியாவிற்கு எதிரான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பராக களமிறக்கப்பட்டால், கீப்பிங் பணியோடு நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி சிறப்பாக பேட்டிங் செய்து, விக்கெட்டிற்கு எதிராக சிறப்பாக ஓடுவது குறித்து விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. அணிக்காக எல்லாம் சரியாக அமையும்.
டி20 போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்படுவது மிகவும் கடினமானது அல்ல. ஏனென்றால் 20 ஓவர்கள் மட்டுமே விளையாடினால் போதுமானது. ஒருநாள் போட்டி சற்று கடினமானது. குறிப்பாக இந்தியாவில் வெப்பம் அதிகமாக இருக்கும். அத்துடன் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பணிபுரிய வேண்டும். ஆகவே, கடினம்தான். இருந்தாலும் நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X