என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 வருடத்தில் எப்படிபட்ட கிரிக்கெட்டராக ஆகியுள்ளேன் என்பதை நிரூபிக்க வாய்ப்பு: டெல்லி வீரர் ஹனுமா விஹாரி
Byமாலை மலர்20 Feb 2019 11:06 AM GMT (Updated: 20 Feb 2019 11:06 AM GMT)
ஐபிஎல் தொடரில் எனது திறமையை வெளிப்படுத்த 3 வருடமாக காத்திருக்கிறேன் என்று ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார். #IPL2019 #HanumaVihari
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் மிடில் ஆர்டர் வீரர் ஹனுமா விஹாரி. இவர் 2013 மற்றும் 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் பங்கேற்றார். ஆனால் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.
25 வயதாகும் ஹனுமா விஹாரி இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது சர்வதேச அணியில் அறிமுகம் ஆனார். முதல் டெஸ்டில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மூன்று போட்டிகளில் களம் இறக்கப்பட்டார்.
இதனால் டெஸ்ட் அணியில் நிரந்தரமாக இடம்பிடிக்கும் நிலையில் உள்ளார். இந்நிலையில்தான் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரை 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணியில் ஹனுமா விஹாரிக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் எனது திறமையை வெளிப்படுத்த 3 வருடமாக காத்திருக்கிறேன் என்று ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹனுமா விஹாரி கூறுகையில் ‘‘என்மீது எந்தவித நெருக்கடியும் இருப்பதாக கருதவில்லை. கடந்த மூன்று வருடங்களாக நான் எப்படிபட்ட கிரிக்கெட் வீரராக மாறியுள்ளேன் என்பதை இது சிறந்த வாய்ப்பு. மூன்று வருடம் இடைவெளிக்குப்பின் ஐபிஎல் தொடருக்கு திரும்புவதால் 2 கோடி ரூபாய்க்கு தகுந்த வகையில் விளையாடுவேனா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இருந்தாலும் அது எனது ஆட்டத்தை பாதிக்காது.
என்னுடைய ஒரே இலக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றியில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதுதான். அணியாக எங்களுடைய உச்சக்கட்ட கனவு கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதுதான்’’ என்றார்.
இரானி கோப்பையில் ஹாட்ரிக் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை விஹாரி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
25 வயதாகும் ஹனுமா விஹாரி இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது சர்வதேச அணியில் அறிமுகம் ஆனார். முதல் டெஸ்டில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மூன்று போட்டிகளில் களம் இறக்கப்பட்டார்.
இதனால் டெஸ்ட் அணியில் நிரந்தரமாக இடம்பிடிக்கும் நிலையில் உள்ளார். இந்நிலையில்தான் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரை 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணியில் ஹனுமா விஹாரிக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் எனது திறமையை வெளிப்படுத்த 3 வருடமாக காத்திருக்கிறேன் என்று ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹனுமா விஹாரி கூறுகையில் ‘‘என்மீது எந்தவித நெருக்கடியும் இருப்பதாக கருதவில்லை. கடந்த மூன்று வருடங்களாக நான் எப்படிபட்ட கிரிக்கெட் வீரராக மாறியுள்ளேன் என்பதை இது சிறந்த வாய்ப்பு. மூன்று வருடம் இடைவெளிக்குப்பின் ஐபிஎல் தொடருக்கு திரும்புவதால் 2 கோடி ரூபாய்க்கு தகுந்த வகையில் விளையாடுவேனா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இருந்தாலும் அது எனது ஆட்டத்தை பாதிக்காது.
என்னுடைய ஒரே இலக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றியில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதுதான். அணியாக எங்களுடைய உச்சக்கட்ட கனவு கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதுதான்’’ என்றார்.
இரானி கோப்பையில் ஹாட்ரிக் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை விஹாரி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X