என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கைப்பந்து லீக் - மும்பை அணி அரையிறுதிக்கு தகுதி
Byமாலை மலர்19 Feb 2019 5:25 AM GMT (Updated: 19 Feb 2019 5:25 AM GMT)
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் புரோ கைப்பந்து லீக் போட்டியில் மும்பை அணி ஆமதாபாத் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. #ProVolleyball
சென்னை:
முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 15-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆமதாபாத் டிபென்டர்ஸ்- யு மும்பா வாலி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 10-15, 15-12, 15-13, 15-12, 15-8 என்ற செட் கணக்கில் ஆமதாபாத் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லீக் ஆட்டம் முடிவில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.
கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடமும், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், யு மும்பா வாலி (மும்பை) அணிகள் தலா 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. செட் விகிதாச்சாரம் அடிப்படையில் சென்னை அணி 3-வது இடத்தையும், மும்பை அணி 4-வது இடத்தையும் பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றாலும் செட் விகிதாச்சாரம் அடிப்படையில் 5-வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ஆமதாபாத் டிபென்டர்ஸ் 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் முதலாவது அரையிறுதியில் கோழிக்கோடு ஹீரோஸ்-யு மும்பா வாலி அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. நாளை நடைபெறும் 2-வது அரையிறுதியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. #ProVolleyball
முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 15-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆமதாபாத் டிபென்டர்ஸ்- யு மும்பா வாலி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 10-15, 15-12, 15-13, 15-12, 15-8 என்ற செட் கணக்கில் ஆமதாபாத் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லீக் ஆட்டம் முடிவில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.
கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடமும், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், யு மும்பா வாலி (மும்பை) அணிகள் தலா 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. செட் விகிதாச்சாரம் அடிப்படையில் சென்னை அணி 3-வது இடத்தையும், மும்பை அணி 4-வது இடத்தையும் பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றாலும் செட் விகிதாச்சாரம் அடிப்படையில் 5-வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ஆமதாபாத் டிபென்டர்ஸ் 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் முதலாவது அரையிறுதியில் கோழிக்கோடு ஹீரோஸ்-யு மும்பா வாலி அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. நாளை நடைபெறும் 2-வது அரையிறுதியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. #ProVolleyball
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X