search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரன்அவுட் ஆகிய விரக்தியில் நாற்காலியை அடித்து நொறுக்கிய ஆரோன் பிஞ்ச்
    X

    ரன்அவுட் ஆகிய விரக்தியில் நாற்காலியை அடித்து நொறுக்கிய ஆரோன் பிஞ்ச்

    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டியில் எதிர்பாராத விதமாக ரன்அவுட் ஆகியதால் விரக்தியில் ஆரோன் பிஞ்ச் நாற்காலியை அடித்து நொறுக்கினார். #BigBashLeague
    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டி நேற்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 25 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 3-வது விக்கெட்டுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் கேமரூன் ஒயிட் ஜோடி சேர்ந்தார். கேமருன் ஒயிட் அடித்த பந்து பந்து வீச்சாளரின் காலில் பட்டு எதிர்முனையில் உள்ள ஸ்டம்பை தாக்கியது.

    அப்போது ஆரோன் பிஞ்ச் க்ரீஸ்-ஐ விட்டு வெளியில் நின்றிருந்தார். இதனால் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். இதனால் ஆரோன் பிஞ்ச் விரக்தியடைந்தார்.

    கோபத்துடன் வெளியேறிய பிஞ்ச், வீரர்களின் அறைக்குச் செல்லும் வழியில் இருந்த நாற்காலியை தனது பேட்டால் ஓங்கியடித்தார். அப்போதும் அவரது கோபம் அடங்கவில்லை. மீண்டும் பேட்டால் ஒரு அடி அடித்துவிட்டு சென்றார்.
    Next Story
    ×