என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கனும்: பிசிசிஐ தலைவர்
Byமாலை மலர்17 Feb 2019 11:11 AM GMT (Updated: 17 Feb 2019 11:11 AM GMT)
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கனும் என பிசிசிஐ-யின் தற்காலிக தலைவர் சிஓஏ-விற்கு பரிந்துரை செய்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் நிதியுதவி செய்து வருகின்றன.
இந்நிலையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கலாம் என பிசிசிஐ-யின் தற்காலிக தலைவர் சிகே கண்ணா உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத் ராய்க்கு பரிந்துரை செய்துள்ளார்.
தற்போது பிசிசிஐ-யின் முடிவுகள் அனைத்தும் நிர்வாகக் குழுவினால்தான் எடுக்கப்படுகிறது. இதுகுறித்து சிஇஓ தலைவர் வினோத் ராய்க்கு சிகே கண்ணா எழுத்தியுள்ள கடிதத்தில் ‘‘புல்வாமா தாக்குதலில் வீரர்கள் மரணம் அடைந்ததை நாடே துக்கமாக அனுசரித்து வரும் நிலையில், நாமும் அதனுடன் பங்கேற்றுள்ளோம்.
மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நம்முடைய ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளோம். வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு பிசிசிஐ சார்பில் குறைந்தது ஐந்து கோடியாவது நிதியுதவி அளிக்க வேண்டும்.
சையத் முஷ்தாக் அலி மற்றும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின் முதல் ஆட்டத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். அதேபோல் ஐபில் தொடரின் தொடக்க விழா மற்றும் தொடக்க போட்டியிலும் அஞ்சலி செலுத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கலாம் என பிசிசிஐ-யின் தற்காலிக தலைவர் சிகே கண்ணா உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத் ராய்க்கு பரிந்துரை செய்துள்ளார்.
தற்போது பிசிசிஐ-யின் முடிவுகள் அனைத்தும் நிர்வாகக் குழுவினால்தான் எடுக்கப்படுகிறது. இதுகுறித்து சிஇஓ தலைவர் வினோத் ராய்க்கு சிகே கண்ணா எழுத்தியுள்ள கடிதத்தில் ‘‘புல்வாமா தாக்குதலில் வீரர்கள் மரணம் அடைந்ததை நாடே துக்கமாக அனுசரித்து வரும் நிலையில், நாமும் அதனுடன் பங்கேற்றுள்ளோம்.
மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நம்முடைய ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளோம். வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு பிசிசிஐ சார்பில் குறைந்தது ஐந்து கோடியாவது நிதியுதவி அளிக்க வேண்டும்.
சையத் முஷ்தாக் அலி மற்றும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின் முதல் ஆட்டத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். அதேபோல் ஐபில் தொடரின் தொடக்க விழா மற்றும் தொடக்க போட்டியிலும் அஞ்சலி செலுத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X