என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கைப்பந்து போட்டி - மும்பையிடம் தோற்றது சென்னை அணி
Byமாலை மலர்17 Feb 2019 4:06 AM GMT (Updated: 17 Feb 2019 4:06 AM GMT)
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற புரோ கைப்பந்து 2-வது கட்ட போட்டியில் சென்னை அணி மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. #ProVolleyball
சென்னை:
6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் கொச்சியில் நடந்தது. 2-வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் நேற்றிரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, யு மும்பா வாலியை (மும்பை) எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்தோடு களம் புகுந்த சென்னை அணி தடுமாறியது. முதல் 3 செட்டுகளையும் வரிசையாக கோட்டை விட்ட சென்னை அணி கடைசி இரு செட்டை மட்டும் வசப்படுத்தி ஆறுதல் அளித்தது. முடிவில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி 14-15, 8-15, 10-15, 15-10, 15-10 என்ற செட் கணக்கில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது.
4-வது லீக்கில் ஆடிய சென்னை அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். அதே சமயம் 3 தோல்விகளுக்கு பிறகு மும்பை பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, ஆமதாபாத் டிபென்டர்சை சந்திக்கிறது. இது தான் சென்னை அணிக்கு கடைசி லீக் ஆகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும். தோற்றால் வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை. #ProVolleyball
6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் கொச்சியில் நடந்தது. 2-வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் நேற்றிரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, யு மும்பா வாலியை (மும்பை) எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்தோடு களம் புகுந்த சென்னை அணி தடுமாறியது. முதல் 3 செட்டுகளையும் வரிசையாக கோட்டை விட்ட சென்னை அணி கடைசி இரு செட்டை மட்டும் வசப்படுத்தி ஆறுதல் அளித்தது. முடிவில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி 14-15, 8-15, 10-15, 15-10, 15-10 என்ற செட் கணக்கில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது.
4-வது லீக்கில் ஆடிய சென்னை அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். அதே சமயம் 3 தோல்விகளுக்கு பிறகு மும்பை பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, ஆமதாபாத் டிபென்டர்சை சந்திக்கிறது. இது தான் சென்னை அணிக்கு கடைசி லீக் ஆகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும். தோற்றால் வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை. #ProVolleyball
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X